ஆத்தூர் பாமக வேட்பாளர் திலகபாமா பேட்டி :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா ஆரியநல்லூரில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முப்பது ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு தொகுதியையாவது கைப்பற்ற வேண்டும் என டாக்டர் ராமதாஸ் போராடி வருகிறார். அவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கியுள்ளார். பொதுமக்களிடம் அவருடைய கருத்துக்களை எடுத்துரைப்பேன். விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை தொகுதியில் செயல்படுத்துவேன். இப்பகுதியில் அதிகமுள்ள நெசவுத்தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன், என்றார். பாமக மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் கோபால், ஜோதிமுத்து, மாவட்ட அமைப்புச் செயலாளர் திருப்பதி உள்ளிட்டோ்ர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்