தொகுதிகளுக்கு தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் :

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் பொதுப் பார்வையாளர்கள் மற்றும் செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல்துறை பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

இதன்படி பழநி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளுக்கு பொதுப்பார்வை யாளராக புபிந்தர்சிங், ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளுக்கு சோமா பட்டாசார்ஜி, நத்தம், திண்டுக்கல் தொகுதிகளுக்கு ரவீந்திரசிங், வேடசந்தூர் தொகுதிக்கு ஹரேகிருஷ்ணா ஆகியோர் பொதுப்பார்வை யாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

செலவினப் பார்வையாளர்களாக ராஜாகோஸ்(பழநி, ஒட்டன் சத்திரம் தொகுதி), சுராஜ்குமார் குப்தா(ஆத்தூர் தொகுதி), முனீஸ்ரஜனி(நத்தம், நிலக்கோட்டை), சுசில்குமார் கட்டியா(திண்டுக்கல், வேடசந்தூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளுக்கும் காவல்துறை பார்வையாளராக மாக்ராண்ட் எம்ரானடே ஆகியோரையும் இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்