புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து சாலை மறியல்

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் நேற்று திண்டுக்கல்லில் விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங் கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் வசந்தாமணி, திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் நிக்கோலஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். எரியோட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு இந்திய விவசாய சங்க மாவட்டச் செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்