திருவாடானை அருகே மனைவி கொலை கணவன் சரண் :

ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானை அருகே உள்ள குறுந்தங்குடியைச் சேர்ந்த விவசாயி ரமேஷ்(36). இவரது மனைவி சாந்தா என்ற சுகந்தி(28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், நேற்று மதியம் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மனைவி சாந்தாவை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அதனையடுத்து ரமேஷ் திரு வாடானை காவல் நிலையத்தில் சரணடைந்தார். போலீஸார் அவரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்