நெல்லை மாவட்டத்திலுள்ள - 204 ஊராட்சித் தலைவர்களுக்கு பயிற்சி :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சித் தலைவர் களுக்கு பயிற்சி கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது

அரசின் திட்டங்களை பொது மக்களுக்கு எடுத்துச் செல்வது, ஊராட்சித் தலைவர்களின் செயல் பாடுகள், அவர்களுக்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கரோனாவை தடுக்க தடுப்பூசி செலுத்துவதுதான் ஒரே வழி என்பதால், ஊராட்சியில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கைகளை ஊராட்சித் தலைவர்கள் எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார். பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிவந்திபட்டி ஊராட்சித் தலைவராக தோந்தெடுக்கப்பட்ட 90 வயது மூதாட்டி பெருமாத்தாளுக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.பழனி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஒழுங்கு நடவடிக்கைகள் ஆணையர்) எம்.சுகன்யா, பயிற்சி ஆட்சியர் மகாலெட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்