மாநில ஐவர் கால்பந்து போட்டி - திண்டுக்கல்லை வென்ற தேனி அணி :

திண்டுக்கல்லில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் தேனி அணி முதலிடத்தையும், திண்டுக்கல் மாவட்ட ஜிடிஎன் கல்லூரி அணி இரண்டாம் இடத்தையும் பெற்றது.

திண்டுக்கல்லில் எஸ்.வி.ஆர். டிரஸ்ட் சார்பில் மாநில அள விலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் 21 அணிகள் பங்கேற்றன.

தேனி அனியும், திண்டுக்கல் அணியும் இறுதி போட்டிக்கு தேர்வாகின. இதையடுத்து நடந்த போட்டியில் கடைசி நிமிடம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் டை பிரேக்கர் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் முதல் இடத்தை தேனி அணியும், இரண்டாம் இடத்தை ஜிடிஎன் கல்லூரி அணியும் பெற்றன.

வெற்றிபெற்ற அணிகளுக்கு நினைவு சுழற்கோப்பையுடன் முதல் பரிசாக பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 7,500 ரூபாயும், மூன்றாம் பரிசாக 5,000 ரூபாயும் வழங்கப்பட்டது.

இப்போட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், ஜி.டி.என். கலைக் கல்லூரி தாளாளர் ரெத்தினம், மாவட்டக் கால்பந்து கழகச் செயலாளர் சண்முகம், மாவட்ட ஹாக்கி சங்கத்தலைவர் காஜா மைதீன், துணைச் செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ரோஸ் பாத்திமாமேரி, முன்னாள் திமுக திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் பெருமாள்சாமி உள் ளிட்டோர் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்