காரைக்குடி ஓட்டலில் அதிகாரிகள் சோதனை - கெட்டுப்போன 100 கிலோ இறைச்சி பறிமுதல் : சுகாதாரமற்ற ரஸ்குகள் தயாரித்த பேக்கரிக்கு பூட்டு

காரைக்குடியில் கெட்டுப்போன 100 கிலோ ஆடு, கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுகாதாரமற்ற முறையில் ரஸ்குகள் தயாரித்த பேக்கரியை அதிகாரிகள் பூட்டினர்.

காரைக்குடியில் உள்ள சில பேக்கரிகளில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரிப்பதாக மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் பிரபாவதிக்கு புகார் சென்றது.

இதையடுத்து அவர் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் காரைக்குடியில் உள்ள 20 ஓட்டல்கள், கோழி இறைச்சி கடைகளில் ஆய்வு செய்தனர்.

அப்போது ஒரு ஓட்டலில் கெட்டுப்போன ஆடு, கோழி இறைச்சி 30 கிலோ, கோழி இறைச்சி கடைகளில் 70 கிலோ இறைச்சி ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒரு பேக்கரியில் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 300 கிலோ ரஸ்குகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடையை பூட்டி சாவியை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE