மதுரை தரகர் கொலை வழக்கில் : சிங்கம்புணரி இளைஞர் கைது :

By செய்திப்பிரிவு

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:

ராமச்சந்திரன் ஏற்கெனவே சிங்கம்புணரியில் குடியிருந்தவர். அதன் அடிப்படையில், அவர் அடிக்கடி சிங்கம்புணரிக்கு வந்து செல்வது வழக்கம். கடந்த 16-ம் தேதி இரவு ராமச்சந்திரனும், சத்தியமூர்த்தியும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். இதில் சத்தியமூர்த்தி வைத்திருந்த மதுவை ராமச்சந்திரன் குடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி, ராமச்சந்திரனை கட்டையால் தாக்கிக் கொலை செய்துள்ளார். மேலும் கொலையை மறைக்க உடலை எரிக்க முயன்றுள்ளார் என்று கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE