மாரியம்மன் கோயில்களில் பால்குட திருவிழா :

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழ மையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அம்மன் கோயில்களில் நேற்று பால்குட ஊர்வலம், மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன.

பேரளி, கே.எறையூர், சிறுகன்பூர், தெற்கு மாதவி, ஆதனூர், நல்லூர், பெருமத்தூர், நமையூர், நூத்தப்பூர், பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள மாரியம்மன் கோயில்களில் நேற்று பால்குட ஊர்வலம் நடை பெற்றது. பாண்டகப்பாடி கிராமத் தில் மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து, மாவிளக்கு பூஜைகள் நடைபெற்றன. கொளக்காநத்தம் மூப்பனார் கோயிலில் பொங்கல் விழா நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE