தேனி கல்லூரியில் இணையவழி கருத்தரங்கம்

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேதியியல் மற்றும் இயற்பியல் துறை சார்பில் இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது.

இன்றைய வாழ்வில் இயற்பியல், அறிவியல் என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் கேபிஆர்.முருகன் தலைமை வகித்தார்.

பொதுச் செயலாளர் டி.ராஜ்மோகன், பொருளாளர் எம்.பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் எஸ். தேவிமீனாட்சி வரவேற்றார். முதல்வர் எஸ்.சித்ரா வாழ்த்துரை வழங்கினார். சேலம் சோனா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் எஸ்.தரண் சுந்தரம், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியை எஸ்.உமாமகேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். நானோ அறிவியல், வேதியியல் படிவமுறை, அயனி உயிரினங்கள் குறித்து விளக்கப்பட்டது. விரிவுரையாளர் பி.மீனாம்பிகை நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE