வாடிப்பட்டி அருகே கோயில் கட்டும் பணி : அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி மேட்டுப்பெருமாள் நகரில் ரூ.1 கோடியில் பாலம்மாள்-எல்லம்மாள் கோயில் கட்டப்படுகிறது.

கட்டுமானப் பணியை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆய்வு செய்தார். அவரை கோயில் திருப்பணிக் குழு தலைவர் சகாதேவன் தலைமையில் பூசாரி நாராயணன் மற்றும் திருப்பணிக் குழுவினர் வரவேற்றனர்.

திமுக ஒன்றியச் செயலாளர் பால ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் கார்த்திக், ராஜகோபால், ராமசாமி, ராமலிங்கம், செந்தில்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE