கம்பி குத்தி தொழிலாளி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சமத்துவபுரத்தில் வசித்தவர் நாகேந்திரன்(40). தென்னை மரம் ஏறும் கூலித் தொழிலாளி.

இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு குட்லாடம்பட்டி மந்தையில் ஒரு கறிக்கடை அருகே நின்றிருந்தபோது, திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது தனது மோட்டார் சைக்கிளில் கட்டியிருந்த தென்னை மரம் ஏற உதவும் இரும்பு கம்பி நாகேந்திரனின் வலது பக்க தாடையில் குத்தியது.

அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். சிகிச்சை பலனின்றி நாகேந்திரன் நேற்று இறந்தார். வாடிப்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE