தேசிய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு :

கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மத்திய அரசின் சிறுபான்மையினருக்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதியான மாணவர்கள், அனைவரும், வரும் 15-ம் தேதிக்குள் தேசிய கல்வி உதவித் தொகைக்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். அனைத்து கல்வி நிறுவனங்களும் புதியது மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்களை உடனடியாக தொடர்பு கொண்டு இணையத்தில் வரும் 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளவும்,’’ எனக் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE