கோவை பாப்பநாயக்கன்புதூரில் : சாலையை சீரமைக்க கோரிக்கை :

கோவை: கோவை மாநகராட்சி மேற்கு மண்டல அலுவலகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை15-வது வார்டு பாப்பநாயக்கன்புதூர் பகுதியில் சென்னிமலை ஆண்டவர் நகர் முதல் 16-வது வார்டு காவல் துறை சோதனைச் சாவடி வரை உள்ள சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்திவரும் நிலையில், மண் சாலையாக உள்ள இந்த சாலையை செப்பனிட்டு தார் சாலையாக தரம் உயர்த்த வேண்டும். கடந்த இரு ஆண்டுகளாக இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளோம். இருப்பினும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையை தார் சாலையாக மாற்றியமைக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE