ஈரோடு: முப்படைகளின் தலைமைத் தளபதி மற்றும் ராணுவ அதிகாரிகள் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தளபதி பிபின் ராவத் படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. தலைமையாசிரியர் சுகந்தி, பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
முன்னதாக அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர் தலைமையில், கட்சி அலுவலகத்தில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறைந்த தலைமைத் தளபதி படத்திற்கு வ.உ.சி.பூங்கா நடைபயிற்சியாளர் சங்கம் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக சார்பில் மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது