ஈரோட்டில் ரூ.6 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்கள் பறிமுதல் :

ஈரோடு/நாமக்கல்: ஈரோடு மற்றும் நாமக்கல்லில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஈரோடு ஈஸ்வரன் கோயில் வீதியில் போலீஸார் நடத்திய சோதனையில், வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீஸார் நேற்று பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கொல்லம்பாளையம் ஜீவானந்தம் வீதியில், நடத்திய சோதனையில், முஸ்தபா என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல்லில் பறிமுதல்

நாமக்கல் மாவட்டம் தோக்கவாடி பேருந்து நிறுத்தம் பகுதியில் போலீஸார் நடத்திய வாகனச் சோதனையில் காரில் கொண்டு வரப்பட்ட 270 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் பகுதியில் இருந்து இவை கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக பவானியைச் சேர்ந்த சதீஷ்குமார், ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்குமார், மோகன்ராஜ், பழனிசாமி ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE