சென்னைக்கு 2,000 டன் நெல் மூட்டைகள் அரைவைக்கு அனுப்பி வைப்பு :

By செய்திப்பிரிவு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ரயில் நிலையத்திலிருந்து சென்னை கொருக்குப்பேட்டைக்கு நேற்று முன்தினம் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் சரக்கு ரயிலில் ஏற்றப்பட்டு, அரைவைக்காக அனுப்பிவைக்கப்பட்டன. இதேபோல, நாமக்கல்லில் கொள்முதல் செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் முட்டைகள் மன்னார்குடிக்கு கொண்டுவரப்பட்டு, நேற்று முன்தினம் காலை ஜோத்பூர் சென்ற பகத் கி கோதி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் ஜோத்பூருக்கு 2-வது முறையாக அனுப்பிவைக்கப்பட்டது. இதன் மூலம் மன்னார்குடி ரயில் நிலையம் வழியாக ரயில்வே துறைக்கு ஒரே நாளில் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE