உடுமலையில் குறைகேட்பு முகாம் :

உடுமலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் சு.வினீத் தலைமை வகித்தார். இதில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்று, 500-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றனர்.முகாமில் கோட்டாட்சியர் கீதா, வட்டாட்சியர் ராமலிங்கம், மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE