அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (டிச

அவிநாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (டிச.4) காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளர் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம்,வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்திநகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி மற்றும் ராக்கியாபாளையம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE