உடுமலை –பழநி சாலையில் மத்திய பேருந்து நிலையத்தை ஒட்டிய காலியிடத்தில் கடந்த 2015-ல் அலுவலகத்துடன் கூடிய வருவாய் துறை சர்வேயர் குடியிருப்பு கட்டப்பட்டது. கட்டி முடித்து 6 ஆண்டுகள் ஆகியும், இதுநாள் வரையிலும் திறக்கப்படவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ‘‘உடுமலையை சேர்ந்தமக்கள் எளிதில் அணுகும் வகையில் பேருந்து நிலையத்தை ஒட்டியே சர்வேயர் அலுவலகம் கட்டப்பட்டது.கட்டி முடித்து 6 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால், சமூகவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. ஏற்கெனவே பலமுறைதொடர்புடைய அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றும்இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. திறக்கப்படாத இந்தஅலுவலகத்துக்குள் அசம்பாவிதம் நிகழ்வதற்குள், கட்டிடத்தைதிறந்து பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.