தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று நீர்வரத்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி என்ற அளவில் நீர்வரத்து பதிவானது. இந் நிலையில், நேற்று காலை இது சற்றே அதிகரித்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து பதிவானது. மாலையிலும் அதே அளவுடன் காவிரியாற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது.