வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் :

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலகத்தில் சில நாட்களுக்கு முன்பு கல்வித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அலுவல் சார்ந்த பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமல் இருந்தது அவரது ஆய்வில் தெரிய வந்தது. மேலும், நிர்வாக ரீதியான பணிகளும் நிலுவையில் இருந்துள்ளன. இதுகுறித்து, காரிமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலர் முருகனிடம் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் கேட்டுள்ளனர்.

ஆனால், இதுகுறித்து அவர் முறையான விளக்கம் அளிக்கவில்லை என தெரிகிறது. எனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கணேசமூர்த்தி உத்தரவின்பேரில் வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE