கிருஷ்ணகிரியில் 722 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (4-ம் தேதி) 722 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத் தில் 4.20 லட்சம் பேர் இதுவரை கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களில் வருவதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்டத் திலுள்ள அனைத்து ஊராட்சி, பேரூராட்சி, நகரங்களில் துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்காகவும், முதல் தவணை செலுத்தியவர்களுக்கு 2-வது தவணை செலுத்திக் கொள்ளவும் 13-வது கரோனா தடுப்பூசி முகாம் மாவட்டத்தில் 722 மையங்களில் நடைபெற உள்ளது.

இம்முகாமினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE