கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு :

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஆண்டு தோறும் சமூக, வகுப்பு நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு ஆகிய பணிகளுக்காக வழங்கப்பட்டு வரும் கபீர் புரஸ்கார் விருது பெற தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை வரும் 8-ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தூத்துக்குடி மாவட்டப் பிரிவு, மாவட்ட விளையாட்டரங்கம், தூத்துக்குடி - 628 001, (தொலைபேசி எண் 0461 2321149) என்ற முகவரியில் நேரில் வந்து சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE