கண்காணிப்பு வார நிறைவு விழா :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கண்காணிப்பு வார நிறைவு விழா நடைபெற்றது.

தலைமை கண்காணிப்பு அதிகாரி ஜெ.பிரதீப் குமார் வரவேற்றார். துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கும், துறைமுக ஊழியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார். அவர் பேசும்போது, ‘‘இந்தியாவின் 75-வது சுதந்திர திருநாள் அமுதபெருவிழாவை கொண்டாடும் தருணத்தில் நாம் அனைவரும் வெளிப்படையான, ஊழலற்ற இந்தியாவை நோக்கி செல்வதற்கு உறுதிமொழி எடுக்க வேண்டும்’’ என்றார். விழாவில் துறைமுகத் துறைத் தலைவர்கள், துறைமுக மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். துணை கண்காணிப்பு அதிகாரி ஆர்.பாலாஜி ரத்தினம் நன்றி கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE