ரூ.12 லட்சத்துக்கு மாடுகள் விற்பனை :

காங்கயம் தாலுகா நத்தக்காடையூர் பழைய கோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கானபிரத்யேக வாரச்சந்தை நேற்று நடந்தது. கோவை,திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்டமாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், காங்கயம் இனமாடுகளை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனர். இதில் ரூ.25,000 முதல் அதிகபட்சமாக ரூ.95,000 வரை மாடுகள் விற்பனையாகின. பசுங்கன்றுகள் ரூ.25,000 முதல் ரூ.40,000 வரை விற்பனையாகின. காளை கன்றுகள் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை விற்கப்பட்டன. மொத்தம் 38 கால்நடைகள் ரூ.12 லட்சத்துக்கு விற்பனையாகின. வரும் வாரம் பழையகோட்டை சந்தையில், மாடுகளுக்கு கால்கட்டு வாய் சப்பை நோய் தடுப்பூசி போடப்படும். இந்த இலவச சேவையை விவசாயிகள் பயன்படுத்தி, தங்கள் மாடுகள், கன்றுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்று, சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE