பொதுத்துறை காப்பீட்டு பணியாளர்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

பொதுத்துறை பொது காப்பீட்டு தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் கூட்டுக்குழு சார்பில் கோவையில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. நஞ்சப்பா சாலையில் உள்ள யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு யுனைடெட் இந்தியா அதிகாரிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். கூட்டுக்குழுவில் அங்கம் வகிக்கும் 18 அமைப்புகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில், பொதுத்துறை பொது காப்பீட்டு நிறுவனங்களின் தனியார் மய முயற்சியைக் கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட வேண்டும், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியில் நிர்வாகத்தின் பங்களிப்பை 14 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE