ஓசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் - அடுக்குமாடி குடியிருப்புகள் 24-ம் தேதி முதல் விற்பனை :

ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரிவு அலுவலகத்தில் முன்னுரிமை என்ற அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்புகள் வரும் 24-ம் தேதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அலுவலர் மனோகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் வீட்டு வசதி பிரிவு திட்டப்பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் 26-ம் தேதி திட்டப்பகுதி 7-ல் உள்ள 78 அடுக்குமாடிகுடியிருப்புகளுக்கும், திட்டப் பகுதி 16-ல் உள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் குலுக்கல் நடத்தப்பட்டு 15 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இதில் உரிய காலத்தில் பணம் செலுத்தாத ஒதுக்கீடுதாரர் களின் ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்படுமாயின், அந்த இனங்களும், மீதமள்ள 127 அடுக்குமாடி குடியிருப்புகளையும் சேர்த்து, ஓசூர் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்தில் வரும் 24-ம் தேதி முதல் ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.tnhb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வரும் 24-ம் தேதி முதல் காணலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE