தேசியக் கல்லூரி- கொங்கு கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் :

திருச்சி தேசியக் கல்லூரி மற்றும் ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இடையே கல்விப் பணிகளை பரிமாறிக் கொள்வதற்காக நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு தேசியக் கல்லூரி முதல்வர் ஆர்.சுந்தர ராமன் தலைமை வகித்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் அக்கல்லூரி முதல்வர் நா.ராமன் கையொப்பமிட்டார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இரு கல்லூரிகளுக்குமிடையே பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிவர்த்தனை செய்து கொள்ளவும், ஆராய்ச்சி மற்றும் இதர கல்விப் பணிகளை பரிமாறிக் கொள்ளவும் வகை செய்கிறது.

இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் பெனட், வி. கோகுலா, தங்கம், ஜெயந்தி, நாகராஜன், உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE