உடுமலை நூலகத்தில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுமென எம்.பி. உறுதி :

உடுமலை: உடுமலை குட்டைத்திடலில் செயல்பட்டு வரும் அரசு பொதுக்கிளை நூலகத்தில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட நூலக அலுவலர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர் சேதுராமன், நூலகர் பீர்பாட்ஷா மற்றும் வாசகர் வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்துக்குப்பின் மக்களவை உறுப்பினர் கு.சண்முகசுந்தரம் கூறும்போது ‘‘டிஜிட்டல் நூலகத்துக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. வரும் 15-ம் தேதி நூலகம் திறக்கப்படும். நூலகத்தின் பின்புறம் காலியிடத்தில் கம்பி வேலி அமைக்கவும், சமூகவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கவும், நவீன கழிப்பிடம் கட்டித்தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்பணிகள், தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE