கட்டிட ஒப்பந்ததாரரிடம் ரூ.10 லட்சம் கொள்ளை :

கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ராஜா(29). கட்டுமான நிறுவன ஒப்பந்ததாரர். இவர், சிங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தார். அதில்,‘‘கோவையில் உள்ள கட்டுமான நிறுவனத்தில் துணை ஒப்பந்தம் எடுத்து தொழில் செய்து வருகிறேன். கட்டுமானத்தை முடித்த பின்னர் முழு தொகையான ரூ.10 லட்சம் கிடைத்தது. கூலி ஆட்களுக்கு ஊதியம் அளிக்க, ரூ. 2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை மாற்ற முயன்றபோது, கோவையைச் சேர்ந்த ராகுல் என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் நேற்று முன்தினம் கோவை திருச்சி சாலையில் சந்தித்தோம். அப்போது ராகுல் உட்பட 5 பேர் என்னை காரில் அழைத்துச் சென்று ரூ.10 லட்சத்தை பறித்து கொண்டு கீழே தள்ளிவிட்டு, தப்பி சென்று விட்டனர்’’ எனக் கூறிஇருந்தார். சிங்காநல்லூர் போலீஸார், ராகுல் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE