கோவை-பொள்ளாச்சி இடையே - நவ.14 முதல் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் :

கோவை-பொள்ளாச்சி இடையே வரும் 14-ம் தேதி முதல் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோவை ரயில்நிலையத்தில் இருந்து வரும் 14-ம் தேதி முதல் சனிக்கிழமை தவிர மற்ற 6 நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்:06419) இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்றடையும். பொள்ளாச்சியில் இருந்து வரும் 15-ம் தேதி முதல் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரையிலான 6 நாட்களும் காலை 7.25 மணிக்குபுறப்படும் ரயில் (எண்:06420) காலை 8.40 மணிக்கு கோவை ரயில்நிலையம் வந்தடையும். இந்த ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு ரயில் நிலையங்களில் ஒரு நிமிடம் நின்று செல்லும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE