சென்னை - கோவை விமானங்கள் ரத்து :

சென்னையில் பெய்துவரும் தொடர்மழை, காற்றின் வேகம் அதிகரிப்பு காரணமாக அங்கிருந்து கோவை வரும் விமானங்களும், கோவையிலிருந்து புறப்படும் விமானங்களும் நேற்று ரத்து செய்யப்பட்டன.

மழை, காற்றின் வேகம் அதிகம் இருந்ததன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் நேற்று மதியம் முதல் மாலை வரை விமானங்கள் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லை. இதன்காரணமாக கோவை-சென்னை இடையேயான விமான சேவை பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோவைவிமான நிலைய அதிகாரிகள் கூறும்போது,"சென்னையிலிருந்து கோவைக்கு வரும் 2 இன்டிகோ விமானங்கள், கோவையில்இருந்து சென்னை புறப்படும் 2 இன்டிகோ விமானங்கள், ஒரு ஏர் இந்தியா விமானம் ஆகியவை ரத்து செய்யப்பட்டன"என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE