நத்தம் அருகே மருத்துவ முகாம் :

By செய்திப்பிரிவு

நத்தம் அருகே செந்துறையில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் விஜயன் முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சித் தலைவர்கள் ராஜேஸ்வரி, சவரிமுத்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரின் தொழில் நுட்ப நேர்முக உதவியாளர் வல்லவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் ஷேக் அப்துல்லா வரவேற்றார். கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, இசிஜி பரிசோதனை உட்பட அனைத்து விதமான சிகிச்சைகளும் அளிக் கப்பட்டன.

தீவிர சிகிச்சை தேவைப்படு வோருக்கு நத்தம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை மேற்கொள்ள பரிந் துரைக்கப்பட்டது. முகாமில் செந்துறை மற்றும் சுற்று வட் டார கிராம மக்கள் சிகிச்சை பெற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE