ராமநாதபுரத்தில் நாளை மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் :

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது.

உச்ச நீதிமன்ற தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, நாளை (நவ.13) காலை 10.30 மணிக்கு ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பொதுமக்கள் தங்கள் சட்டம் சார்ந்த மற்றும் சட்டம் சாராத பிரச்சினைகளுக்கு மனு கொடுத்து தீர்வு பெறலாம் என ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE