காரைக்காலில் முதல் உலகப் போர் நினைவு நாள் நிகழ்ச்சி :

காரைக்காலில் முதல் உலகப் போர் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

முதல் உலகப் போரின்103- வது நினைவு நாளையொட்டி, ஓய்வுபெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்கத்தின் சார்பில், காரைக்கால் ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள பிரெஞ்சு போர் வீரர் நினைவுத் தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

புதுச்சேரிக்கான பிரெஞ்சு கவுன்சில் தூதர் லிசே பரே தல்போ, ஆட்சியர் அர்ஜூன் சர்மா, துணை ஆட்சியர் (பேரிடர் மேலாண்மை) எஸ்.பாஸ்கரன், ஓய்வுபெற்ற பிரெஞ்சு ராணுவ வீரர்கள் சங்க நிர்வாகிகள், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற காரைக்கால் வாழ் மக்கள் உள்ளிட்டோர் பிரெஞ்சு போர் வீரர் நினைவுத் தூணுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, நினைவுத் தூண் அருகே இரு நாட்டு தேசியக் கொடிகள் ஏற்றப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE