பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து - தூத்துக்குடியில் சிறப்பு அதிகாரி ஆய்வு :

தூத்துக்குடியில் பேரிடர் கால மீட்பு நடவடிக்கைகள் குறித்து பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரி ஐஜி அபின் தினேஷ் மொடக் நேற்று ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சென்னை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு ஐஜி அபின் தினேஷ் மொடக் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அடங்கிய திருநெல்வேலி சரகத்துக்கு பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருநெல்வேலி சரகத்தில் பல்வேறு இடங்களை ஆய்வு செய்து வருகிறார். நேற்று அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்டத்தில் மழை வெள்ளம் அதிகமாக உள்ள இடங்கள், குளங்கள் மற்றும் ஆபத்தான ஆற்றங்கரை பகுதிகள் குறித்தும், பேரிடர் காலத்தில் வெள்ளத்தில் சிக்கும் பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அவர்களுக்கான பேரிடர் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங் கினார். பேரிடர் மீட்பு பணி களுக்காக காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எஸ்பி எஸ்.ஜெயக்குமார் விளக்கினார்.

ஆய்வின்போது ஏடிஎஸ்பிக்கள் கோபி, கார்த்திகேயன், இளங் கோவன், தூத்துக்குடி டிஎஸ்பி கணேஷ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE