விருத்தாசலம் அருகே பெருந்துறையில் - ரூ.15 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையில் விரிசலா? :

விருத்தாசலம் அருகே பெருந்துறை பகுதியில் மாவட்டக் கனிமவள அறக்கட்டளை நிதி மூலம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கடந்த 2019-20 நிதியாண்டில் கட்டப்பட்ட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

தற்போது கனமழையில் தடுப்பணை அருகே கரையின் இரண்டு புறமும் கட்டப்பட்டுள்ள தடுப்பு சுவரும் சேதமடைந்து கரைகளும் சரிந்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கரை முழுவதும் உடைந்து அருகில் உள்ள விளை நிலங்கள் பாதிக்கப்படும் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

இதனிடையே வெள்ளாறு வடிநில கோட்ட பொதுப்பணி நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளிடம் விரிசல் குறித்து கேட்டபோது, "தடுப்பணையில் உள்ள இடைவெளி இடையே உள்புறம் தார் உள்ளது. இடைவெளி விட்டு தான் தடுப்பணை கட்ட முடியும். அதை விரிசல் என்கின்றனர். குறிப்பிட்ட நீளத்திற்கு இடைவெளி ஏற்படுத்தி பாலம் அமைப்பது போன்று தான் இதுவும். எனவே இதனால் பாதிப்பு ஏதுமில்லை " என விளக்கமளித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE