ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை என கடைசி நேரத்தில் அறிவித்ததால் மாணவர்கள் சிரமப்பட்டனர்.

தொடர்மழையால் ராமநாதபுரம் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வாறு அறிவிக்கப்படாததால் மழையில் நனைந்துகொண்டே மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்றனர். ஆனால் காலை 9.30 மணியளவில் விடுமுறை என அறிவிப்பு வெளியானது.

இதை முன்கூட்டியே அறிவித் திருந்தால் மாணவ, மாணவியர் வீட்டிலேயே இருந்திருப்பர். கடைசிநேரத்தில் அறிவித்ததால் மாணவ, மாணவியர் மழையில் நனைந்தபடியே சென்றதாக பெற்றோர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE