சிறுவனை கொன்ற இளைஞர் கைது :

நத்தம் அருகே சிறுவனை கழுத்தை அறுத்துக் கொன்ற சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

நத்தம் அருகே கோட்டையூர் சின்னையம்பட்டியைச் சேர்ந்த ராமகி ருஷ்ணன் மகன் ஹரிஹரதீபன்(8). 4-ம் வகுப்புப் படித்து வந்தான். பெற்றோர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டின் மாடியில் ஹரிஹரதீபன் கழுத்தறுக்கப்பட்டு இறந்து கிடந்தான். நத்தம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். திண்டுக்கல் எஸ்.பி. சீனிவாசன் நேரில் விசாரணை நடத்தினார்.

இதில் சிறுவனை அதே பகுதியைச் சேர்ந்த அஜய் ரத்தினம்(19) கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர். முன் விரோதத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE