மாலையிட்டான் வாரியில் உடைப்பு;மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ ஆய்வு :

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு தெற்கே வடசேரி சாலை பகுதியில் செல்லும் மாலையிட்டான் வாரியில் தொடர் மழை காரணமாக அளவுக்கதிகமான தண்ணீர் ஓடுகிறது. இதனால், அத்திக்கோட்டை கிராமத்தின் அருகே இந்த வாரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, அத்திக்கோட்டை விளைநிலங்களில் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது. இதன் காரணமாக அத்திக்கோட்டை, ஆலங்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 500 ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்கள் மழைநீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மன்னார்குடி எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா நேற்று அத்திக்கோட்டைக்குச் சென்று, வாரியில் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும், உடனடியாக மணல் மூட்டைகளைக் கொண்டு, உடைப்பை அடைக்கும் பணியை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். அவருடன், நீர்வள ஆதாரத் துறை உதவி செயற்பொறியாளர்கள் இளங்கோவன், மதியழகன், வருவாய்த் துறை துணை வட்டாட்சியர் நாகராஜ் மற்றும் அலுவலர்கள் சென்றிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE