மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் :

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்அலுவலக கூட்டரங்கில் மாவட்டஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, பட்டா பெயர் மாற்றம், மாற்றுத்திறனாளி நல உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 318 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருப்பதி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE