கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் - முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் :

நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.இ., பிடெக் வகுப்புகள் நேற்று தொடங்கின.

கல்லூரிக்கு வந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர்களை சீனியர் மாணவ, மாணவிகள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள் கூறினார்.

பொறியியல் படிப்பு மூலம் புதிய கண்டுபிடிப்புகளை வெளிகொணர்வதில் மாணவர்கள் ஆர்வம் காட்டவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE