தண்ணீர் என நினைத்து பூச்சி மருந்து குடித்தவர் உயிரிழப்பு :

நாகர்கோவில்: குமரி மாவட்டம் கருங்கல் அருகே மிடாலக்காடு முகிலன்விளையை சேர்ந்த ராமையன் மகன் ஜெயக்குமார் (27), தொழிலாளி. இவர், தோட்டத்துக்கு சென்றிருந்தபோது தண்ணீர் தாகம் ஏற்பட்டுள்ளது. அப்போது வாழைகளுக்கு இடையே கிடந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை அவர் குடித்துள்ளார்.

ஆனால், பூச்சி மருந்து கலந்த தண்ணீர் என்பதால் சிறிது நேரத்தில் ஜெயக்குமார் தோட்டத்துக்குள் வாயில் நுரைதள்ளியவாறு மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயக்குமார், அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கருங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE