சுசீந்திரம் அருகே வீட்டில் கஞ்சா செடி வளர்த்த இளைஞர் கைது :

நாகர்கோவில்: சுசீந்திரம் அருகே குஞ்சன்விளையில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சுசீந்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சாய்லட்சுமி தலைமையிலான போலீஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அருண்(23) என்பவர் தனது வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடியை வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 1 கிலோ 100 கிராம் எடையுள்ள கஞ்சா செடியை அங்கிருந்து போலீஸார் அகற்றி, பறிமுதல் செய்தனர். அருண் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE