முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக - விழும் நிலையில் இருந்த மரக் கிளைகள் அகற்றம் :

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் மரம் வேரோடு சாய்ந்ததில் போக்குவரத்து பெண் காவலர் சிக்கி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் நடவடிக்கையை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதைதொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் 1 லட்சத்து 75 ஆயிரத்து 309 மரங்கள் உள்ளன.

மாநகராட்சி சார்பில் பருவமழை காலத்துக்கு முன்னதாகவே போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள மற்றும் பாதுகாப்பற்ற முறையில் விழும் நிலையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE