பிஎஸ்என்எல் புதிய சலுகை :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.

இதன்படி, வீட்டுகளுக்கு ஃபைபர் இணைப்பு (எஃப்டிடிஎச்) பெறும் புதிய வாடிக்கையாளர்களுக்கு நவ.1-ம் தேதி முதல் 90 நாட்களுக்கு அனைத்து ஃபைபர் பிராட்பேண்ட் திட்டங்களிலும் முதல் மாத கட்டணத்தில் 90 சதவீத தள்ளுபடி சலுகை வழங்கப்படும்.

தரைவழி தொலைபேசி இணைப்பு (லேண்ட்லைன்) பெறும் அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் ரூ.250/- மற்றும் எஃப்டிடிஎச்-க்கு ரூ.500/- எனும் நிறுவுதல் கட்டண தள்ளுபடி நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்எம் மொபைல் சேவைகளின் கீழ், வரும் டிசம்பர் மாதம் வரை அனைத்து புதிய வாடிக்கையாளர்களுக்கும் இலவச சிம் கார்டு வழங்கப்படும்.

புதிய முதல் ரீசார்ஜ் வவுச்சர் ரூ.48-க்கு, அளவில்லா இலவச குரல் அழைப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படும். இச்சலுகை 15 நாட்கள் செல்லுபடியாகும்.

வரும் டிச.26-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாப் அப் ரூ.110-க்கு முழு டாக் டைம் வழங்கப்படும் என, பிஎஸ்என்எல் நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE