உணவுப் பாதுகாப்பு அதிகாரி தேர்வு - ஆன்லைனில் விண்ணப்பிக்க நவ.5 வரை அவகாசம் :

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 119 உணவுபாதுகாப்பு அதிகாரி காலிப் பணியிடங்கள் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதற்கான ஆன்லைன் பதிவு அக்டோபர்13-ம் தேதி தொடங்கியது.

தேர்வர்களின் நலன் கருதி ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழில் போதிய அறிவு பெற்றிருப்பதுடன் எஸ்எஸ்எல்சி அல்லது பிளஸ்2-வில் தமிழை ஒரு பாடமாக எடுத்துபடித்திருக்க வேண்டியது அவசியம்.

உணவு பாதுகாப்பு அதிகாரி தேர்வுக்கு ஃபுட் டெக்னாலஜி, டெய்ரி டெக்னாலஜி, பயோ-டெக்னாலஜி இளநிலை பட்டதாரிகள், பிஎஸ்சி விவசாயம், பிவிஎஸ்சி, பிஎஸ்சி. பயோ-கெமிஸ்ட்ரி, மைக்ரோ-பயாலஜி பட்டதாரிகள், எம்பிபிஎஸ் பட்டதாரிகள் மற்றும் எம்எஸ்சி கெமிஸ்ட்ரி முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர்.

வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 32 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 59 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி நவம்பர் 5-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE