அகில இந்திய கட்டுமான தொழி லாளர் சம்மேளன தலைவர் சோ.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
புதுவை நலவாரியத்தில் சுமார்40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்க ளுக்கு நல வாரியம் அளித்திடும் விழாக்கால போனஸ் தொகையை ரூ.7 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என அகில இந்திய கட்டுமான தொழிலாளர் சம்மேளனம் போராடி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக வழங்கப்படும் ரூ.2ஆயிரம் போனஸ் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கமுதல்வர் ஆணை பிறப்பித்துள் ளார். இதற்கு தலைமை செயலர், நிதி செயலர் ஆகியோர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது கண்டிக்கத்தக்கது. பண்டிகை நெருங்கிய நிலையில்உடனடியாக இத்தொகையை வழங்க ஆளுநர் ஆணை பிறப் பிக்க வேண்டும். இத்தொகையை ரேஷன்கார்டுக்கு என அளிக்காமல் உறுப்பினர் ஒவ்வொருவருக் கும் வழங்க வேண்டும்.