பாமக மாநில துணைத் தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்: ஜி.கே.மணி அறிவிப்பு :

By செய்திப்பிரிவு

பாமக மாநில துணைத் தலைவர் ச.வடிவேலன் என்பவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டம் தாண்டாகவுண்டன்புதூரைச் சேர்ந்த பாமக மாநிலத் துணைத் தலைவர் ச.வடிவேலன் என்பவர் கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதனால், அவர் இன்று (நேற்று) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து கட்சியின் நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோரின் ஒப்புதலுடன் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE